இதையும் ெகாஞ்சம் கவனியுங்க

Update: 2023-04-02 11:58 GMT

மார்த்தாண்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பல்வேறு உதவிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு வசதியாக போலீஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, அந்த பெயர் பலகையில் எழுத்துகள் அழிந்து படிக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெயர் பலகையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கா.வினுகுமார், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்