ரெயில் பணிகள் அவதி

Update: 2023-04-02 11:52 GMT

நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் வழியாக பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோட்டார் ெரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால், ெரயிலுக்கு செல்லும் பயணிகளுக்கு அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மிகுந்த உதவியாக உள்ளது. ஆனால், அதே பஸ்கள் மறு மார்க்கமாக நாகர்கோவிலுக்கு வரும்போது ெரயிலுக்கு செல்லும் பயணிகளை 2 கிமீ தூரத்தில் உள்ள இடலாக்குடி சந்திப்பு மெயின் ரோட்டில் இறக்கி விடுகின்றனர். இதனால், பயணிகள் அங்கிருந்து ஆட்டோவிலோ அல்லது நடைபயணமாகவோ செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த வழித்தடத்தில் வரும் பஸ்களை ரெயில்நிலையம் வரை இயக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லியோன், மருங்கூர்.

மேலும் செய்திகள்