விபத்து தடுப்புச்சுவர் தேவை

Update: 2023-04-02 11:10 GMT

சுங்கான்கடையில் இருந்து ஆளுர் செல்லும் சாலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரை வழியாக செல்கிறது. ஆனால், குளத்தின் கரை பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படால் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி குளத்தின் கரை பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், ஆளூர்.

மேலும் செய்திகள்