புதர்மண்டி கிடக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

Update: 2023-04-02 06:04 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பொதுமக்களுக்கு மருத்துவ பணியாளர்கள் மருந்து மாத்திரைகளை வழங்குகின்றனர். எனவே சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்