தடுப்பணையை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்

Update: 2023-03-29 17:04 GMT

தேனி வீரபாண்டியில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணை பகுதியில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் தடுப்பணையில் தண்ணீர் இருப்பது கூட வெளியே தெரியவில்லை. அந்த அளவுக்கு இந்த செடிகள் சூழ்ந்துள்ளன. இதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும் என்று அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஆகாய தாமரை செடிகளை தடுப்பணையில் இருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்