டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும்

Update: 2023-03-29 16:22 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல் சாலையில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பார் 24 மணி நேரமும் சந்துக்கடையாக செயல்படுகிறது. அங்கு கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி மதுப்பிரியர்கள் குடிக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரமாக உள்ளதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பார் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

-செல்வம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்