நிழற்குடை பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-29 14:00 GMT


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பாலையூர் பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி கிடக்கிறது.இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

==========================

மேலும் செய்திகள்