தூர்ந்துவரும் ஊரணி

Update: 2023-03-29 12:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டி கிராமத்தில் அம்மா ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி தூர்வாரப்படாத நிலையில் தற்போது சம்புகள், புற்கள் முளைத்த நிலையில் தூர்ந்துபோய் வருகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஊரணியில் மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அம்மா ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்