கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே ஆலமரத்து மேடு பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள ஆலமரத்தடியில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள், பொதுமக்கள், கால்நடைகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.