கரூர் மாவட்டம், மரவாப்பாளையம் சாலையோரத்தில் இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடப்பதினால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.