கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபால் புரம், பழைய கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். ஆகவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.