மதுபிரியர்களின் கூடாரமாகும் குளக்கரை

Update: 2023-03-19 15:48 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிழக்கு கோபுரவாயிலின் எதிர்புறம் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் அமர்ந்து இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்துகிறார்கள். மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை குளக்கரையிலேயே போட்டுச்செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் முகம் சுழித்தபடி குளக்கரையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்