பராமரிப்பின்றி காணப்படும் விமான முனையம்

Update: 2026-08-09 13:07 GMT

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாடு இன்றி கிடக்கும் பழைய விமான முனையம் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 450 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பழைய முனையத்தை வணிக வளாகமாக மாற்றாமல், சரக்கு முனையமாக மாற்றுவதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும். எனவே, சிதிலமடைந்து வரும் பழைய முனையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்