இடிந்து கிடக்கும் ராஜகால்வாய் தடுப்பு சுவர்

Update: 2023-03-19 14:46 GMT
பெங்களூரு அல்சூர் பகுதியில் ராஜகால்வாய் ஒன்று உள்ளது. அந்த ராஜகால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அதற்காக அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிக்கப்பட்டு பொக்லைன் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் ராஜகால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்துவிட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ராஜகால்வாய் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்