பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-19 14:33 GMT
திருச்சி கண்ணுடையான்பட்டி கிராமம் உடையாப்பட்டி-குளித்தலை சாலையானது பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினமும் சென்றுவரும் சாலையாகும். மேலும் கனரக வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை பாலம் உள்ளது. அந்த பாலமானது சேதமடைந்த நிலையிலும், மின்விளக்கு அற்ற நிலையிலும் உள்ளதால் இப்பகுதியினர் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சரிசெய்து, மின்விளக்குகளும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்