சேதமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2023-03-19 14:32 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி ஒன்றியம் கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் கற்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்