`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-03-19 14:27 GMT
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, ஆவாரங்காட்டுபுத்தூர் பகுதியில் சாலைகள் அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் சாலைகள் போடப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த சாலையை ஜல்லிக்கற்களை போட்டு சீரமைத்து தற்சமயம் வேகத்தடையும் அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்