கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 17:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மாநில எல்லைகள் அமைந்துள்ள குப்பம் ஜங்ஷனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. பின்பு உரிய பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்