விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் வடக்கில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் விவசாயப்பணிகளுக்கு போதிய அளவு நீரை சேமிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?