சாலையோர கடை அகற்றப்படுமா?

Update: 2023-03-15 15:01 GMT
பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் நடைபாதையாக அது உள்ளது. தற்போது அந்த நடைபாதையின் குறுக்கே சாலையோரம் வியாபாரி ஒருவர் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்