புவனகிரி தாலுகா வடதலைக்குளம் ஊராட்சியில் மெயின்ரோட்டில் இருந்து மாரியம்மன்கோவில் வரை இருந்த வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக கானாமல் போனது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.