பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

Update: 2023-03-12 16:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலப்பள்ளி கிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொது மக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா ?

-பாண்டுரங்கன், சிகரலப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்