சுகாதார வளாகம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-12 16:53 GMT

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். இவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் முன் பகுதியில் உள்ள சாலையை ஒட்டி பொது சுகாதார வளாகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வளாகம் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் இதை யாரும் பயன்படுத்த முடியவில்லை. அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வோரின் நலன் கருதி இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்