டாஸ்மாக் கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

Update: 2023-03-12 14:13 GMT
கரூர் மாவட்டம், மூலிமங்கலம் பிரிவு எதிரே கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை செயல்பட வேண்டும். ஆனால் இந்த டாஸ்மாக் கடை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே செயல்படுகிறது. மது பாட்டில்களை வாங்க வருபவர்கள் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அருகே அமர்ந்து மதுவை அருந்திவிட்டு கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு மது பாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டுவிட்டு சில நேரங்களில் மது போதையில் அங்கேயே படுத்து விடுகின்றனர். அந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்