சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

Update: 2023-03-12 14:13 GMT

கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் சாமி சிலைகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. எனவே அறநிலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்