நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-12 14:04 GMT
அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் செல்லும் முதன்மை சாலையில் மு,புத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கிராமப்புற நூலகம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்சமயம் வரை இந்த நூலகம் பயன்பாட்டில் இல்லை. மேலும், நூலக கட்டிடத்தின் மேல் தளம் சிதிலமடைந்தும் முன்புற சிமெண்டு கலவைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் முன்புற பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளது. நூலகம் பயன்பாட்டில் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாழடைந்த நூலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய நூலகம் அமைத்து தர முன்வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்