பூட்டிக்கிடக்கும் அலுவலகம் திறக்கப்படுமா?

Update: 2023-03-12 10:20 GMT

தஞ்சையை அடுத்த ராகாம்பாள்புரத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊராட்சி தலைவர் அலுவலகம் பூட்டி கிடப்பதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தை கொண்டுதான் துறையூண்டார்கோட்டை, சடையார்கோவில், சின்னபுலிகாடு,நார்த்தேவன்குடிகாடு ஆர்சுத்திபட்டு போன்ற கிராம மக்கள் பயன்அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டுவரி ரசிது போன்றவற்றை பெறுவதற்கு வழியின்றி தவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டிக்கிடக்கும் ஊராட்சி தலைவர் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்