நாய்கள் தொல்லை

Update: 2023-03-12 10:19 GMT

தஞ்சை கீழராஜவீதியில் உள்ள பொன்னையாபிள்ளை சந்து, கிருஷ்ணா பிள்ளை சந்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்