தூர்வார வேண்டும்

Update: 2023-03-12 08:02 GMT

அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கு பகவதிபுரத்தில் பாலசவுந்தரிகுளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் தாமரைச்செடிகள், முட்செடிகள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மறுகால் ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் படர்ந்துள்ள தாமரை செடிகளை அகற்றுவதுடன், ஆக்கிரமிப்புகளையும் மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நீலகண்ணன், வடக்கு பகவதிபுரம்.

மேலும் செய்திகள்