விபத்து அபாயம்

Update: 2023-03-12 08:00 GMT

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்த்தேக்க தொட்டியின் சேதமடைந்த தூண்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், ஆத்திபுரம்.

மேலும் செய்திகள்