தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-03-12 07:59 GMT

தோட்டியோடு சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையோரமாக குளம் உள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும் இந்த சாலையோரத்தில் உள்ள குளத்திற்கு விபத்து தடுப்பு சுவர்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி குளத்தின் கரையில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ரவிகுமார், மொட்டவிளை.

மேலும் செய்திகள்