பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 14:27 GMT


நாகையில் அரப்சா தர்கா பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த கட்டிடம் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்