பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

Update: 2023-03-08 13:32 GMT
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை 40 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்தநிலையில் கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. தற்போது மாணவ-மாணவிகள் அருகில் ஒரு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்