தடுப்புச்சுவரை விரைந்து கட்ட வலியுறுத்தல்

Update: 2023-03-08 13:31 GMT
அரியலூர் மாவட்டம், மு. புத்தூர் கிராமத்தில் மங்கட்டான் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு தென்புற பகுதியில் இருந்து ஏரியின் நடுப்பகுதி வரை பாதியளவு மட்டும் தடுப்பு சுவர் அமைக்க பட்டுள்ளது. பிறகு ஏரியின் நடுப்பகுதியில் இருந்து வடக்கு பகுதி முடிவு வரை இது நாள் வரை தடுப்புச் சுவர்கள் அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்