தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2023-03-08 13:30 GMT
கரூர் மாவட்டம், முத்தனூர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டுப்படுவதற்காக பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலம் கட்டுவதற்காக குழி பறிக்கப்பட்டுள்ளது. அருகில் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம் பாளையம் வருபவர்கள் குழி இருப்பது தெரியாமல் வாகனத்துடன் சிலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் பலர் தட்டுதடுமாறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்