சாலையில் கொட்டப்பட்ட ஆகாயத்தாமரைகள்

Update: 2023-03-08 13:30 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறையில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முளைத்திருந்த ஆகாயதாமரைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. பின்னர் அந்த ஆகாய தாமரைகள் அனைத்தும் தேசியநெடுஞ்சாலையில் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து வருகின்றனர். இதனால் அந்த சாலையை ஒரு வழி சாலையாக தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்