தினத்தந்தி புகார்பெட்டிக்கு நன்றி

Update: 2023-03-08 12:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் கடம்பராயன்பட்டி சாலையில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் உள்ள சாலையில் ஏராளமான இடங்களில் வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசாமல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூசி, எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்