தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-03-08 12:52 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நத்தமாங்குடி பிரிவு ஆலங்குடி மகாஜனம் முதல் செங்கரையூர் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகாார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்