தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-08 11:26 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஊராட்சி, காமராஜர் காலனி பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் குடிநீரில் உப்பு நீர் அதிகமாக கலந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீரில் உப்பு கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் தொட்டியை சீரமைத்து, உப்பு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பொதுமக்கள், ஆலங்குடி 

மேலும் செய்திகள்