இதையும் கவனியுங்க

Update: 2023-03-08 08:48 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டார் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் எப்போது பரபரப்பாக காணப்படும். இங்கு காய்கறிகள் வாங்குவதற்காக கூழக்கடை பாஜார் என்ற மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டு ஆண்டுகள் ஆகியும் இந்த மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மாற்றப்படாமல் நாகர்கோவில் நகராட்சி என்று உள்ளது. எனவே, பழைய பெயர் பலகையை அகற்றி விட்டு நாகர்கோவில் மாநகராட்சி கூழக்கடை பஜார் என புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்