புவனகிாி தாலுகா வடதலைக்குளம் கிராமத்தில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.