போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

Update: 2023-03-05 16:33 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியாக காரவள்ளி விளங்குகிறது. அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதிக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் அடிவார பகுதியில் திடீரென்று தோன்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறகாவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. போலீசார் அங்குள்ள வாடகை கடைகளில் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். எனவேஅந்த பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம். காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்