புகழூர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-05 12:10 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீர் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான தாமரைகள், செடி, கொடிகள் மிதந்து செல்கின்றன. அதேபோல் வாய்க்காலின் இரு கரை ஓரங்களிலும் தண்ணீரில் ஏராளமான செடி, கொடிகள் மிதக்கின்றன. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்