கோத்தகிரியில் கடைவீதி, கேம்ப் லைன், பாப்டிஸ்ட் காலனி, ஆர்.கே.சி. லைன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகள் தொடர்ந்து உலா வருகின்றன. அவை கட்டிடங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் அவர்கள் வெளியே நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன்பாக, அந்த பகுதிகளில் கரடிகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.