மேச்சேரி ஒன்றியம் பாரப்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இந்த ரேஷன் கடை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?