முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் இருந்து வாகன சவாரி செல்ல தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு வனத்துறை சார்பில் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தன. தற்போது அந்த கழிப்பிடங்கள் திடீரென மூடி கிடக்கின்றன. இதனால் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அந்த கழிப்பிடங்களை திறக்க வேண்டும்.