பெண்கள் அவதி

Update: 2023-03-05 12:10 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தை அடுத்த கட்டிபாளையத்தில் பெண்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த 2 மாதங்களாக மின் மோட்டார் பழுதாகி இயங்காத நிலையில் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்