மதுரை மாவட்டம் அழகர் கோவில் மெயின் ரோடு பொய்கைகரைபட்டியில் சிலர் சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரங்களை போட்டு விட்டு செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையின் இவ்வாறு வெட்டிய மரங்களை போட்டுள்ளதால் வாகனஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்வதால் சாலையில் போடப்பட்டுள்ள வெட்டிய மரங்களை அகற்ற வேண்டும்.