அகற்ற வேண்டிய சீமை கருவேல மரங்கள்

Update: 2023-02-26 16:51 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி ஏரி சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் முற்றிலும் சீமை கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செந்தில், நடுப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்