மயில்களை பாதுகாக்க கோரிக்கை

Update: 2023-02-26 16:49 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சுற்றி விவசாய நிலங்கள் அதிக அளவில் காணப்படுவதால் அங்கு இரை தேடி மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது. கடந்த சில தினங்களாக ஒரு பெண் மயில் சேந்தமங்கலம் மெயின் ரோடு பகுதியில் சுற்றி திரிகிறது. அது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் மயில்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே நகர்ப்பகுதியில் தேசிய பறவையான மயில்கள் நுழைவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயில்களை பாதுகாக்க வேண்டும்.

-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்